குறள் – நமது குரல்
479 . அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் .
விளக்கம் :
நம் பொருளின் அளவு, வளம் எவ்வுளவு
என்று அறிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
நினவகத்திலிருந்து :
இன்று நாம் உபயோகிக்கும் பல பொருட்கள் முந்தைய
காலத்தில் வாழ்ந்த அரச பரம்பரையில் கூட
உபயோகிக்கப்படாத சாதனங்களே.
இன்றைய முக்கியத் தேவை கூட , நாளை
பயன்படாமல் போய், புதுப் பொருள்கள் உருவாகி
இன்றியமையாதவை ஆகலாம் .
அளவான வாழ்க்கையை அறிந்து வாழ்வோம் .