4,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவனத்தில் பசுமை குறியீட்டு காலம் எனலாம்.

4,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
பாலைவனத்தில் பசுமை குறியீட்டு காலம் எனலாம்.

அரேபியா முழுவதும் பல மனித இனத்தின் பரவல்கள் –
நெஃபுட் பாலைவனம், நான்கு, மூன்று, இரண்டு மற்றும்
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவன பசுமை
நிறைந்த சன்னல்களாக தெரியும் என பதிந்து உள்ளனர்.

நெஃபுட் பாலைவன கண்டுபிடிப்புகள், அரேபியாவின்
பழமையான தேதியிட்ட மனித இனத்தின் (Hominin)
ஆக்கிரமிப்புகளை உள்ளடக்கியது ஆகும் .
அரேபிய உட்புறத்தில் குறைந்தது ஐந்து மனித இன
விரிவாக்கங்களை வெளிப்படுத்துகிறது.

கிட்டத்தட்ட 400, 300, 200, 130-75 மற்றும்
55 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
வறட்சி நிலை குறைக்கப்பட்டு ‘பச்சை’ நிறம் சன்னமாக தெரிந்து உள்ளதாக பதிந்து உள்ளனர்.
அல்-நஃபுத், பாலைவனப் பகுதி, வடக்கு சவுதி அரேபியா, பெரிய அரேபிய பாலைவனத்தின் ஒரு பகுதி.

அந்த மணல் மிகப்பெரிய பிறை வடிவ மணல் திட்டுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவை அந்த பகுதியில் அடிக்கடி வீசும் காற்றின் செயல்பாட்டின் மூலம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.

இது அரேபிய பாலைவனத்தில் இரண்டாவது பெரிய மணல் பரப்பாகும்.

இது தெற்கிலும் கிழக்கிலும் உள்ள பிரமாண்டமான ரூப் அல்-காலியால் மட்டுமே அதிகமாக உள்ளது.
அல்-நஃபுத் நிலப்பரப்பு, வடமேற்கில் உள்ள மணற்கல் அமைப்புகளிலிருந்து அரிக்கப்பட்ட மணல்களால் நிரப்பப்பட்ட மேட்டு நிலங்களால் சூழப்பட்ட ஒரு படுகையைக் கொண்டுள்ளது

வடக்கு சவூதி அரேபியாவின் நெஃபுட் பாலைவனத்திலிருந்து முதல் தேதியிட்ட அச்சுலியன் தளம் , அதனுடன் தொடர்புடைய ஆழமான, அநேகமாக நன்னீர், ஏரிக்கான பழங்கால சூழலியல் சான்றுகளுடன் அறியலாம்

வலமிடம் நெடுங்கோடும் குறுங்கோடும் அறிவோம்.

பெருந்தகை சொல் இருந்ததே அறியாதவன்
இருந்த இடத்தில் இருந்தே பகிர்ந்தானவன்
பருப்பொருள் சார்ந்த இடமே என்றானாவன்
உருப்பொருள் உதித்த சொல்லில் குறித்தானவன்.

குறிஞ்சிப்பண் நிகழும் நிற்றலில் கற்றானவன்
குறிப்பொடு புவியியல் கீழடி ஏதென
பறிக்காது பதுங்கிய குழிகளில் கலந்தானவன்
மறித்தும் மறக்காமல் கூறும் பண்பாடு.

பண்பாடு மொழி பேசும் படம்
கண்ணும் கருத்தில் உண்டு உயிர்த்து
பண்ணும் பாடலும் பாடும் நாடும்
உண்ணும் உணவும் நீரும் நிலமே.

நிலம் நீர் அழகு படிவம்
உலகம் வியக்கும் வண்ணமே வடிவம்
நலமும் வளமும் பெற்ற புவி
வலமிடம் நெடுங்கோடும் குறுங்கோடும் அறிவோம்.

OCTOBER 07 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 07 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 06 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 06 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

வையக தகுதி கொள் – உலக செயல்பாட்டில் வாழும் வாழ்க்கை

நாம் வாழும் வாழ்க்கை உலக செயல்களில் உள்ள பகிர்வுகளில்

ஒரு சில நல்ல செயல் முறைகளால் நிலைத்து இருக்கிறது. அவற்றில் என்றும் ஒன்றி இருப்பது நற்சிந்தனை, நற்செயல்கள், அறத்தால் இயன்ற அளவு இடைவிடாது செய்யும் செயல், ஏற்கும் இடமாக உலக அளவில் ஒவ்வொரு நாளும் வாழும் வாழ்க்கை மதிப்புறுவாகிறது. (தி.33)
உலக வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தமது தொடர் செயலாக தந்தை மகனுக்கு அறிவளிக்கச்செய்வதே ஆகும். வாழும் வாழ்க்கையில் தனக்கு கொடியது எனப்பட்டதை பிறருக்கு எவ்வகையிலும் செய்ய விரும்பாமல் இருத்தலே நல்லது. வாழ்க்கையில் நிலையாத செல்வம் நிலைக்க பெற்றால் , நிலைத்தவற்றை தமது வாழ்நாள் முழுவதும் அறச்செயலில் ஈடுபடுதல் அனைவருக்குமான படிமலர்ச்சியாக, வரலாற்றில் தொடரும். தெரிந்த செயல்வகை தெரியாததையும் அறிந்திட செய்து செயற்கை நுண்ணறிவும் உலக வாழ்க்கையில் செயல்படத் தொடங்கும்
உலகு தம்மோடு கொள்ளும்:
‘தம்மோடு கொள்ளாதவற்றை கொள்ளாது உலகு’ (தி.470)

உலகம் கொள்முதல் மூலம் கொள்ளுகின்றவை எல்லாம் இயற்கையின் பங்களிப்பில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். எந்நாளும் நீரால் இருமடங்கு நிறைந்தவையாகவும், ஒரு மடங்கு நிலத்தின் அரணாக, மேடான பகுதிகளில் மலை பாதுகாப்பாகவும் , மதிற்போல அணியாக காடுகளையும் காக்க வேண்டிய மண்ணும் இருக்கவேண்டியதே உலகமே சுற்றுகின்ற சுற்றுசூழலாகும்.(தி.742)
“செயல் திறன் வித்தே சொத்தாகும்”. ஒவ்வொருவரும் தனது செய்யக்கூடிய செயலை முடிக்கும் ஆற்றலும், அதனை விலகச் செய்ய செய்யும் மாற்றோரின் வன்மையும் சீர்தூக்கிப் பார்த்து செயல்படும் ஆக்கத்தினை மேலும் அறிந்து செயல்படுதல் எக்காலத்திலும் பயன்பெறும்.
அரியவற்றை கிடைக்க செய்வதிலும் செய்வதற்கு
உரியவற்றையும் செய்திடல் வேண்டும்.
(தி.489)
செய்பவர் தன்மையும் செய்யும் செயலின் ஏற்கும் காலத்தையும் உணர்ந்து செய்வது நாம் வாழும் வாழ்க்கைக்கு பொதுவாகவும் பொருத்தமாகத் துணை புரியவேண்டும். வாழும் வாழ்க்கை உலக நன்மைக்கு பயன்பெறும் எனில் போற்றி செயல்பட வேண்டும்.

உலக இயற்கை முறை சார்ந்த குறியீடுகளை அறிந்து தெரிந்து செல்லும் ‘அ’மைப்பு ‘ர’கவாரியாக ‘சு’கமளிக்கும் ‘அரசு’ ஆக நிலைக்கும்.

சொல்லுகின்ற சொல் நம்செல்களின் வளர்ச்சியினை பொறுத்து, உள்ளத்தின் அடிப்படையில், தாயனை, ஆறனை தொடர்புகளில் கோர்த்து, தைத்து அமைத்த சொற்கள் வாயிதழிலில் எளிதாக வெளிவரும். சொன்னபடி செய்யும் அளவறிந்து வாழும் வாழ்க்கையே எந்நாளும் சிறப்புறும்.

OCTOBER 05 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 05 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

வெள்ளத்தின் போது அணைகளின் நீரின் அளவு எந்த வகையான கணக்கு உதவுகிறது?

வெள்ளத்தின் போது அணைகளின் நீரின் அளவு எந்த வகையான கணக்கு உதவுகிறது ?

இயல்மாற்றத்தினில் விளிம்பு செய்வகை(இ.வி.செ) (அல்லது)
விளிம்பு நிலை மதிப்பு இயல் மாற்றம்
(MRT)என்பது உருமாற்றத்தின் விளிம்பு விகிதத்தைக் குறிக்கிறது.

இயல்மாற்றத்தினில் விளிம்பு செய்வகை(இ.வி.செ) என்பது ஒரு பொருளின் பிரிவுகளின் எண்ணிக்கையை மற்றொரு தயாரிப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் அதிகரிக்கலாம்.

இது விளிம்பு வாய்ப்பு செலவு என்றும் அழைக்கப்படுகிறது.
வாய்ப்பு செலவு
(இ.வி.செ) என்பது ஏதாவது ஒரு கூடுதல் பிரிவுகளின் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புச் செலவு ஆகும்.
உற்பத்தி வாய்ப்புக்கூறுகளின் எல்லை
(இ.வி.செ) என்பது உற்பத்தி வாய்ப்புக்கூறுகளின் எல்லையின் சரிவின் முழுமையான மதிப்பாகும்.
வழங்கலுக்கும் தேவைக்கும் இடையே
(இ.வி.செ) மாற்று அமைப்பில் கவனம் செலுத்துகிறது, அதே சமயம் மாற்றீட்டின் விளிம்பு விகிதம் தேவையில் கவனம் செலுத்துகிறது.
கணக்கீடு:
மற்றொரு தயாரிப்பின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் விடுவிக்கப்பட்ட அளவின் மூலம் கூடுதல் வெளியீட்டு அலகுகளைப் பிரிப்பதன் மூலம் (இ.வி.செ) கணக்கிடப்படலாம்.
ΔY என்பது ஒரு பொருளின் அளவு மாற்றத்தைக் குறிக்கிறது.

ΔX என்பது மற்ற பொருட்களின் அளவின் மாற்றத்தைக் குறிக்கிறது.

இயல்மாற்றத்தினில் விளிம்பு செய்வகை(இ.வி.செ)
எ.கா:
வெள்ளக் கட்டுப்பாட்டிற்கென நன்மை பயக்கும் நோக்கங்களுக்காக ஒருங்கிணைந்த சேமிப்புத் திறன் கொண்ட நீர்த்தேக்கங்களுக்கு, வெள்ளக் கட்டுப்பாடு வரையறுக்கப்பட்ட நீர்மட்டத்தை நடுத்தர மற்றும் சிறிய அளவுகளில் பயன்படுத்தும்போது மின்னிலை பலன் இழப்பு ஏற்படும்.

OCTOBER 04 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 04 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 03 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்.,

OCTOBER 03 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்.,

திருச்சிராமலை தாயுமானவர் ‘திருச்சிராப்பள்ளி’ என எவ்வாறு பெயர் பெற்ற தளம் ஆகிறது?

திருச்சிராமலை தாயுமானவர் ‘திருச்சிராப்பள்ளி’ என எவ்வாறு பெயர் பெற்ற தளம் ஆகிறது?
திருச்சிராமலை யமகவந்தாதி:

திருத்தில்லை சிந்தனையின் வரலாற்றில் ‘சிதம்’
திருவம்பலம் பேரம்பலம் சிற்சபைகூடி ‘பரமாகி’
திருமஞ்சனம் கொண்டு அருளும் ‘சிதம்பரம்’
திருத்தில்லையமகஅந்தாதி நூலமைப்பில் திருவாசகம்.

திருவாசகம் சிற்றம்பலங் கண்டு கனியக்கனிய மனம்
திருவம்பல ‘யமகமாக’ வந்துள்ளமை குறியீடு
திருத்தில்லையமகவந்தாதி யமகத் தொடரும்
திருவாய் மலர்ந்து நிற்கும் சிற்றம்பலமே.

சிற்று அம்பல் அங்கு அண்டு
சிற்றம்பலம் கண்ட யமக‌ அமைப்பு
சிற்றமைப்பு கொண்ட சிரபுரம் மலை ‘சிற்றம்பலங்கண்டு’ தெளிந்த பொருளில் பாடிய
சிற்றம்பலங் கண்டு முன்னாண்டு கோடிசிலைச்சிலைக்கோர்.

கோடிக்கணக்கான ஆண்டு முந்தி வந்த
நாடியும் ஒடும் தேகம் எங்கும்
ஆடிய நடனம் ஆடும் நரம்பொலி
பாடி பரம்பொருள் கண்ட திருச்சிராமலை.

திருச்சிராமலை யமகவந்தாதி பாட்டுடைத் தலைவன்
திருசிரபுரம் திருசிரகிரி திருச்சிராப்பள்ளியென எழுந்தருளும்
திருச்சிராப்பள்ளி மலை யமக அந்தாதி
திருமாதிருக்கும் தொடரில் களமாக தாயுமானவர்.

OCTOBER 02 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 02 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்