பிங்கல, சூடாமணி என்ற நூலின் மூலத்தையும் இணைத்து, 1923-ஆம் ஆண்டில், முதன்முதலாக, அச்சு வடிவில் முழுமையான நூலாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த நூலைத் தழுவி கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு வரை நூல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆய்வாளர் பலரால் இந்த நூல் பத்தாம் நூற்றாண்டிற்கு “சேந்தன் திவாகரம் “ என்ற நூலும், பின் , பிங்கலம் சூடாமணி என முறைப்படி கருதப்படுகிறது. சொற்களுக்கு பொருள் தரும் முதல் நிகண்டு ஆகும்.
ஆளும் ஆளுமைத் தொகுப்பே பதிவு நாளும் பொழுதும் நம்பிய செயல் யாளும் புவியடி ஐந்தடுக்கு சறுக்கு தாளும் படிப் படியான படிமலர்ச்சி
படித்த கல்வி தரும் நிலை தேடித் தொடர்ந்தே நூலெனத் திகழும் நாடிச் சென்று சொற்பொருள் களஞ்சியம் ஓடி மின்னும் மின்னல் பேரலை.
பேரலை காற்று நீர் தீ ஆர வடிவ எழுத்துரு சொற்கள் கரம் கொண்டு உட்பொருள் கை தரம் உயர்த்த நிலைப் பணி. –
———————–
ஆளுமை கொண்ட தமிழி பதிவு : சேந்தன் திவாகரம் பிங்கல சூடாமணி
12. பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி
பக்கம் 110 தலைப்பு
சித்திர கவி வகை இலக்கம் 52:
21 பெயர்கள் கொண்ட ஓசைப் பா
மாலை மாற்றே:
மாலை மாற்றே, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழு கூற்றறிக்கை, காதை கரப்பே, கரந்துறைப் பாட்டே, பாத மயக்கே, பாவின் புணர்ப்பே, கூடசதுக்கம், கோ மூத்திரியே, ஓர் இனத்து எழுத்தால் உயர்ந்த பாட்டே, ஒற்றுப் பெயர்த்தல், ஒரு பொருட் பாட்டே, விகற்ப நடையே வினா வுத்தரமே, சருப்பதோபத்திரம், சார்ந்த எழுத்தே, வருக்கமும் மற்றும் வடநூற் கடலுள் ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி விரித்து மறைத்து மிறைக் கவிப் பாட்டுத் தெரித்துப் பாடுவது சித்திரக் கவியே.
மாலைமாற்று என்பது ஒரு செய்யுளை ஒவ்வோர் எழுத்தாகத் தொடக்கம் முதல் இறுதி வரை படித்தாலும், இறுதியிலிருந்து ஒவ்வோர் எழுத்தாகத் தொடக்கம் வரை படித்தாலும் மாறாமல் அமைவது மாலைமாற்று என்னும் சித்திரகவியாகும்.
எ.கா: விகடகவி
எழுத்து வருத்தனம்
எழுத்து வருத்தனமாவது, யாதேனும் ஒரு பொருள் பயக்கும் ஒரு மொழியை எடுத்துக்கொண்டு அது தானே வெவ்வேறு சொல்லாய் வெவ்வேறு பொருள்படுமாறு எழுத்துக்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வளர்ப்பதாகும்.
“‘ந’ம் மொழி ‘ம’துர உ’ரை’ ஆற்றுபவர் ” என்ற சொல்லில் நமது மொழிதனில் மதுரமான உரையாற்றும் என்று சொல்லும் சொல்லில் ” மதுரை ” எனக் கொள்ளலாம்.
எமது பதிவு :
கரந்துறை பாவினம் சித்திரக் கவிதை ஆரம் வட்டம் சதுரத் தமிழி சொற்கள் தரமிகு விந்தை எழுத்துரு ஒலியன் கரம் பிடித்து படித்து எழுவகை.
எழும் கேள்விகளில் பதில் வாசிப்பில் வாழும் நாள் உயிர்த் துடிப்பு முழு வரிகளில் சொல் முறைமை தழுவித் தரணியில் காக்கும் பொறுப்பு.
பொறுப்பு கொள்ளும் இணைப்பு வரிசை நறுமணம் வீசும் காற்றின் மொழி வேறுபாடு உண்டு ஒன்றினால் ஒற்றுமை கூறுகள் ஒற்று மிகும் திறன்.
திறன் ஒத்திசைவு பாவின் புணர்ப்பு கறந்து கலந்து உறையில் திணிப்பு திறவுகோல் வாயசைப் பாக்களில் தொடரலை உறவு கொள்ளும் சக்கர உருவெழுத்து.
பற்றாக் குறையே அரசுநிதி ! மற்றவை நீளும் வரிவிதிப்பு !!
இயல் இறக்கையில் பறவை பறக்கும் முயல் தாவும் பற்றும் கிளை வயல் வெளி எலி கொறிணி மயில் பறக்க எத்தனிக்கும் சிறகு.
சிறகு கொண்ட ஆற்றல் மிக்க பறக்கும் நன்கு விரித்து மெல்ல பறப்ப தெல்லாம் இயற்கைத் தேர்வு பிறப்பின மாற்றமே காலயெல்லை அறிகுறி.
அறிகுறி எதுவும் தெரியாது தற்குறிப்பில் பொறி ஐந்தும் இயங்கும் பேசும் பறிக்கும் நெல்கதிர் அறுவடை காலக்கணிப்பு பறித்தவுடன் பற்றிக் கொள்ளும் பற்றாளர்
பற்றாளர் பற்றிக் கொள்ளும் நிதி உற்று பார்ப்போருக்கு நிதியுதவியும் தடுப்பு ஆரம் வண்டி கண்டு பிடிப்பு நரம்பு நடு முதுகு தண்டு கரம் பிடித்து நடுவோர்க்கு தொல்லை.
தொல்லைத் தொடரிலும் தொடர்பிலும் புரிவர் பார்வை கோடி சிறிய புள்ளி ஆர்வம் கொண்டு ஆற்றல்மிகுத் திறன் ஊர்வெளி வான்வெளி நோக்கம் ஏவுகணை
ஏவுகணை பாயும் கூர்மை மிதப்பு நாவு உயர்வு நவிற்சித் தொடர் பாவும் பண்ணும் பயிலும் முயற்சி தாவும் நுட்பம் புவிசார் குறியீடு.
குறியீடு புத்துயிராய் அரசு நிதி அறிந்து கொள்ளும் அறிக்கை வரிசை வறியவர்க்கு வரிவிதிப்பும் பற்றாக்குறை அரசுநிதியும் ஆறிய கஞ்சியின் வளம் வறியவர்க்கு.