Author: THANGAVELU CHINNASAMY
செயல் மன்ற பதிவர் - செ ம
SEYALMANTRAM.
24 Subha Akila Nagar
Airport
TRICHY. TAMILNADU
INDIA
40,000 ஆண்டில் அக விசை மொழிகளானது எவ்வாறு?
அங்கத்தின் அசைவும்
தங்கத்தரமும் பற்றாக்குறையே!!
தங்கத்தின் குறை தரத்தில் தெரியும்
அங்கத்தில் உறையும் தாயனை ஆறனை
தங்கும் யாவும் தசையின் திறன்
பொங்கும் இன்பம் கோடி பெறும்.
பெற்றவை நிற்றல் நீடித்த பிடிப்பு
உற்றவை ஆற்றலில் இயங்கும் இயக்கம்
வற்றும் நீர் கடலில் பெறுவோம்
ஆற்றும் சேவை சேர்க்கும் வையகம்.
வையகப் பார்வையில் வைப்போம் கல்விச்சோலை
தயக்க மின்றிய செயல்பாடு பயிற்சி
உயர உயர்த்தும் வகைப் போக்கு
இயற்கை இறைமை ஒன்றென காண்போம்.
காணும் காலம் கணிப்பின் படி
நாணும் பெண்டிர் உள்ளக் கோயில்
அணுவும் அசைவும் இல்லத் தசைவு
மாண்பும் மகிழ்வும் கொண்டு திளைப்போம்.
வாழ்வதே அன்பிலும்
பண்பிலுமே ! ஏசுவதேனோ!!
காலை உணவு தரம் பார்த்து
மாலை வரை மதி கொண்டு
வேலை வாய்ப்பு பெறும் தகுதி
அலை யலையாய் பெண்டீர்க்கு ஏனோ!
ஏனைய அறிவுரை வழங்கும் முறை
தானை தரணி போற்றும் வண்ணம்
மானே தேனே கெஞ்சி கொஞ்சி
தானே எல்லா மென ஏசுவதேனோ!
ஏச்சும் பேச்சும் இரு பாலாரக்கே
இச்சை அடங்கும் வரை ஆசை
கச்சை கட்டிய கடிவாய் அடக்கு
பச்சை இலைப் பண்பேத் துளிர்க்கும்.
அகவல் சூழ் மெய் யழகு
தகவல் அறியும் உணர்வு காணும்
மகளிர் மட்டுமே பெறும் பேறு
பகலிரவு எப்பொழுதும் சூழும் வேலை.
13.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூக்கள் பூத்த தருணத் தோற்றம்
பூக்கும் பூக்களில்
சேகரிக்கும் வையத்தேனீ
பூக்கள் பூக்கும் தருணம் புவி
ஆக்கம் தரும் போலும் உயிர்
காக்கும் படை யின அங்கம்
ஒக்கும் ஆற்றல் மிகும் நகரும்.
நகரும் தர சைகை வகை
பகரும் பக்கத் திறன் பயிலும்
மகிழும் வண்ணம் செயல் என்றும்
ஊகித்து உணரும் நுகரும் மணம்.
மணம் கமழும் மனித வளம்
குணம் கொண்டத் தொடர்பே அறம்
கணம் உள்ள தன்மை மற்றும்
பணம் கொடுப்பதும் தருவதும் இருப்பு.
இருப்பு நிலை ஏட்டின் வகுப்பு
கருப்பு பேரணியில் கலந்த கலவை
அரும்பு மலரும் மொட்டு விடும்
கரும்பு சுவைச் சேவையில் தேனீக்கள்.
புவி யடித்தட்டு அகண்ட அடிச் சறுக்கு!
பேரண்ட பேரதிர்வு பேரியக்க ஆற்றல்
கண்ட விடத்து இயல்பில் ஞானமும்
விண்ணில் பாயும் செயற்கை கோளும்
மண்ணில் ஒளிரும் விஞ்ஞான வித்தை.
கண்டம் ஒன்றாய் சுழன்றப் புவி
துண்டுத் துண்டாய் பிரிந்த பிரிவு
உண்டு உறைவிடத்து பயின்ற பெயரில்
நண்டும் கூடும் நகர்ந்து செல்லும்!
புவியடிச் சறுக்கலில் நசுங்கி மக்கள்
தவிக்கும் தகர்ப்பில் மாடி யிடுக்கு
ஓவிய வரையறை நிலைக்க வரைபடம்
தாவி யடித்தட்டும் அகண்ட மானது!
ஞானக் கதிரும் விட்டுச் சென்றது
மோன மாய் மாயவலை யதிகாரம்
ஊனமாய் ஆக்கிய வேகச் சுழலங்கே
வான வேடிக்கை யகற்று இயற்கையே!

ஒன்றாய் சுழன்றாய் சுற்றினாய் கண்டமானாய்!
ஒன்றாய் சேர்ந்த புவி பிரிந்து
நன்றாய் கண்டமாய் சுற்றும் சுழல்
கன்றாய் இருந்த கோள் துண்டாய்
நின்றாய் நகர்ந்தாய் சுற்றினாய் நாடானாய்.
நாடி ஓடி ஓடும் ஓட்டம்
துடி துடித்து நாடும் ஆகும்
வாடி செழிக்கும் பயிரும் நீரில்
ஆடி குலுங்கும் அழகே அழகு.
அழகாய் சிறகாய் பறக்கும் பறவை
மழலை மொழி செல்லின் திறன்
பழகி பேசும் நேசத்தின் இயல்பு
உழவன் நிலமே உயிரைத் தேற்றும்.
தண்டு கொண்டு வென்று சென்றாய்
கண்டு பிடித்து கசக்கி பிழிந்து
உண்டு உயிர்த்த நாளின் போக்கும்
ஆண்டு பலவாறு உதயமாய் சுழலும்.
ஒன்றாய் சுழன்றாய் சுற்றினாய் கண்டமானாய்!!
ஒன்றாய் சுழன்றாய் சுற்றினாய் கண்டமானாய்!
ஒன்றாய் சேர்ந்த புவி பிரிந்து
நன்றாய் கண்டமாய் சுற்றும் சுழல்
கன்றாய் இருந்த கோள் துண்டாய்
நின்றாய் நகர்ந்தாய் சுற்றினாய் நாடானாய்.
நாடி ஓடி ஓடும் ஓட்டம்
துடி துடித்து நாடும் ஆகும்
வாடி செழிக்கும் பயிரும் நீரில்
ஆடி குலுங்கும் அழகே அழகு.
அழகாய் சிறகாய் பறக்கும் பறவை
மழலை மொழி செல்லின் திறன்
பழகி பேசும் நேசத்தின் இயல்பு
உழவன் நிலமே உயிரைத் தேற்றும்.
தண்டு கொண்டு வென்று சென்றாய்
கண்டு பிடித்து கசக்கி பிழிந்து
உண்டு உயிர்த்த நாளின் போக்கும்
ஆண்டு பலவாறு உதயமாய் சுழலும்.


