யமக’ என்ற அந்தாதி பதிவின் நம் தமிழ் மொழி மூலத்தினை பகிர்ந்து கொள்கிறேன்.
1.ய: ய என்ற ஒலிப்பு யா(ய+ஆ)ழ்(ழ+ °)= ‘யாழ்’ என ‘ழகர’ ‘ஒசை’ என ‘ஓ’ங்கிய ‘சை’கையாகி ஒலிப்பினில் ‘யாப்பு’ யா(ய+ஆ) என ஓங்கார இலக்கில், அக்கண நேர இலக்கண புரிதலில் யா(ய+ஆ+ப் +பு) ‘யாப்பு’ என சிறப்பாக இலக்கண ‘மரபு’ வழி
முறைமை பெற்றது.
2. ‘ம’ எனும் ‘மரபு’ என்பது ‘ம’க்களின் ‘ர’சனையை ‘பு’ரிதலின் ஒலிப்பு முறை ஆகும்.
3. க என்ற ஒலிப்பு ‘க’கரத்தின் மெய்யொலியில் அணி சேரும்
இலக்கின் கணம் என்போம்.
யாழ் எனும் பாடும் பாவின் பகுதியொடு
பெயரும் செயலும் கருப்பொருள்கள் ஆகும்.
‘யமக’ என்ற இலக்கண அணி ‘மடக்கு’
சொல்லணியைக் குறிக்கிறது.
பரம் ஆகிய பொருள் தரும்
கரம் காட்டி காட்சி கொடுக்கும்
தரம் ஆகி தரணி எங்கும்
சிரம் தாழ்த்தி வணங்கும் முறை.
முறை திருமுறை அந்தாதி எதுகை
பறை சாற்றிய வழிபாடு செய்வது
உறை உள்ள உறையூர் மலை
இறை பொருளாய் மறைமுறையாய் திருச்சிராமலை.
திருச்சிராமலை திரு சிராமலை மெய்பொருள்
திருச்சிற்றம்பல யமக அந்தாதி எதுகை
திருச்சிற்றம்பல வெண்பா அந்தாதி என்னும்
திருச்சிராமலை திருமாதிருக்கும் திருவிசைப்பா திருசிரபுரம்.
திருசிரபுரம் அந்தாதி பாடலின் பொருள்
திருத்தலம் தாங்கிய மொழி பேசும்
திருச்சிராமலை யமகவந்தாதி தாயுமானவர் பாடும்
திருவந்தாதி ‘பாடகம்’ எனும் ‘திருச்சிராப்பள்ளி.’
பாடும் அகத்தில் ‘பாடகம்’ என பெயர் பெற்றது.
பாடகம் பாடும் பொருளாய் விளங்கும்:
ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதி ஆகும்.
இரண்டு அடிகளுக்கு இடையே அமைவதை அந்தாதித் தொடை என்றும் இரண்டு செய்யுட்களுக்கு இடையே அமைவதை அந்தாதிச் செய்யுள் என்றும் கூறுவர்.
மடக்கணி மடிக்கணியாய் மடிக்கணினி மடக்கணியிலே
மடக்கணி மடிக்கணினியாய் மடிக்கணினி மடக்கணியிலே.
மடக்கணி மடிக்கணினியாய் மடிக்கணினி மடக்கணியிலே.
மடக்கணி மடிக்கணியாய் மடக்கணினி மடக்கணியிலே.
1. பாடகம் பாடும் பொருளாய் விளங்கும் –
‘பா’என்னும் பா’ட’ல் அ’க’த்தில் ஆகு’ம்’ பொருள் ஆக விளங்க
2. பாடகம் பாடும் பொருளாய் விளங்கும் –
பாட அகத்தோன் பெருக்கம் பொருள்கோள் முதலிடை கடையிலும் வளரும்.
3. பாடகம் பாடும் பொருளாய் விளங்கும் –
பாட்டியல் பாங்குற பாவிற்க்கும் பொருண்மையின் செயலாய் தொடரும்.
4. பாடகம் பாடும் பொருளாய் விளங்கும்-
பாராட்டிய வண்ணம் அகப்பொருள் பொலிவுடன் காணப்படும்.
4,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
பாலைவனத்தில் பசுமை குறியீட்டு காலம் எனலாம்.
அரேபியா முழுவதும் பல மனித இனத்தின் பரவல்கள் –
நெஃபுட் பாலைவனம், நான்கு, மூன்று, இரண்டு மற்றும்
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவன பசுமை
நிறைந்த சன்னல்களாக தெரியும் என பதிந்து உள்ளனர்.
நெஃபுட் பாலைவன கண்டுபிடிப்புகள், அரேபியாவின்
பழமையான தேதியிட்ட மனித இனத்தின் (Hominin)
ஆக்கிரமிப்புகளை உள்ளடக்கியது ஆகும் .
அரேபிய உட்புறத்தில் குறைந்தது ஐந்து மனித இன
விரிவாக்கங்களை வெளிப்படுத்துகிறது.
கிட்டத்தட்ட 400, 300, 200, 130-75 மற்றும்
55 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
வறட்சி நிலை குறைக்கப்பட்டு ‘பச்சை’ நிறம் சன்னமாக தெரிந்து உள்ளதாக பதிந்து உள்ளனர்.
அல்-நஃபுத், பாலைவனப் பகுதி, வடக்கு சவுதி அரேபியா, பெரிய அரேபிய பாலைவனத்தின் ஒரு பகுதி.
அந்த மணல் மிகப்பெரிய பிறை வடிவ மணல் திட்டுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவை அந்த பகுதியில் அடிக்கடி வீசும் காற்றின் செயல்பாட்டின் மூலம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
இது அரேபிய பாலைவனத்தில் இரண்டாவது பெரிய மணல் பரப்பாகும்.
இது தெற்கிலும் கிழக்கிலும் உள்ள பிரமாண்டமான ரூப் அல்-காலியால் மட்டுமே அதிகமாக உள்ளது.
அல்-நஃபுத் நிலப்பரப்பு, வடமேற்கில் உள்ள மணற்கல் அமைப்புகளிலிருந்து அரிக்கப்பட்ட மணல்களால் நிரப்பப்பட்ட மேட்டு நிலங்களால் சூழப்பட்ட ஒரு படுகையைக் கொண்டுள்ளது
வடக்கு சவூதி அரேபியாவின் நெஃபுட் பாலைவனத்திலிருந்து முதல் தேதியிட்ட அச்சுலியன் தளம் , அதனுடன் தொடர்புடைய ஆழமான, அநேகமாக நன்னீர், ஏரிக்கான பழங்கால சூழலியல் சான்றுகளுடன் அறியலாம்
வலமிடம் நெடுங்கோடும் குறுங்கோடும் அறிவோம்.
பெருந்தகை சொல் இருந்ததே அறியாதவன்
இருந்த இடத்தில் இருந்தே பகிர்ந்தானவன்
பருப்பொருள் சார்ந்த இடமே என்றானாவன்
உருப்பொருள் உதித்த சொல்லில் குறித்தானவன்.
குறிஞ்சிப்பண் நிகழும் நிற்றலில் கற்றானவன்
குறிப்பொடு புவியியல் கீழடி ஏதென
பறிக்காது பதுங்கிய குழிகளில் கலந்தானவன்
மறித்தும் மறக்காமல் கூறும் பண்பாடு.
பண்பாடு மொழி பேசும் படம்
கண்ணும் கருத்தில் உண்டு உயிர்த்து
பண்ணும் பாடலும் பாடும் நாடும்
உண்ணும் உணவும் நீரும் நிலமே.
நிலம் நீர் அழகு படிவம்
உலகம் வியக்கும் வண்ணமே வடிவம்
நலமும் வளமும் பெற்ற புவி
வலமிடம் நெடுங்கோடும் குறுங்கோடும் அறிவோம்.
நாம் வாழும் வாழ்க்கை உலக செயல்களில் உள்ள பகிர்வுகளில்
ஒரு சில நல்ல செயல் முறைகளால் நிலைத்து இருக்கிறது. அவற்றில் என்றும் ஒன்றி இருப்பது நற்சிந்தனை, நற்செயல்கள், அறத்தால் இயன்ற அளவு இடைவிடாது செய்யும் செயல், ஏற்கும் இடமாக உலக அளவில் ஒவ்வொரு நாளும் வாழும் வாழ்க்கை மதிப்புறுவாகிறது. (தி.33)
உலக வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தமது தொடர் செயலாக தந்தை மகனுக்கு அறிவளிக்கச்செய்வதே ஆகும். வாழும் வாழ்க்கையில் தனக்கு கொடியது எனப்பட்டதை பிறருக்கு எவ்வகையிலும் செய்ய விரும்பாமல் இருத்தலே நல்லது. வாழ்க்கையில் நிலையாத செல்வம் நிலைக்க பெற்றால் , நிலைத்தவற்றை தமது வாழ்நாள் முழுவதும் அறச்செயலில் ஈடுபடுதல் அனைவருக்குமான படிமலர்ச்சியாக, வரலாற்றில் தொடரும். தெரிந்த செயல்வகை தெரியாததையும் அறிந்திட செய்து செயற்கை நுண்ணறிவும் உலக வாழ்க்கையில் செயல்படத் தொடங்கும்
உலகு தம்மோடு கொள்ளும்:
‘தம்மோடு கொள்ளாதவற்றை கொள்ளாது உலகு’ (தி.470)
உலகம் கொள்முதல் மூலம் கொள்ளுகின்றவை எல்லாம் இயற்கையின் பங்களிப்பில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். எந்நாளும் நீரால் இருமடங்கு நிறைந்தவையாகவும், ஒரு மடங்கு நிலத்தின் அரணாக, மேடான பகுதிகளில் மலை பாதுகாப்பாகவும் , மதிற்போல அணியாக காடுகளையும் காக்க வேண்டிய மண்ணும் இருக்கவேண்டியதே உலகமே சுற்றுகின்ற சுற்றுசூழலாகும்.(தி.742)
“செயல் திறன் வித்தே சொத்தாகும்”. ஒவ்வொருவரும் தனது செய்யக்கூடிய செயலை முடிக்கும் ஆற்றலும், அதனை விலகச் செய்ய செய்யும் மாற்றோரின் வன்மையும் சீர்தூக்கிப் பார்த்து செயல்படும் ஆக்கத்தினை மேலும் அறிந்து செயல்படுதல் எக்காலத்திலும் பயன்பெறும்.
அரியவற்றை கிடைக்க செய்வதிலும் செய்வதற்கு
உரியவற்றையும் செய்திடல் வேண்டும்.
(தி.489)
செய்பவர் தன்மையும் செய்யும் செயலின் ஏற்கும் காலத்தையும் உணர்ந்து செய்வது நாம் வாழும் வாழ்க்கைக்கு பொதுவாகவும் பொருத்தமாகத் துணை புரியவேண்டும். வாழும் வாழ்க்கை உலக நன்மைக்கு பயன்பெறும் எனில் போற்றி செயல்பட வேண்டும்.
உலக இயற்கை முறை சார்ந்த குறியீடுகளை அறிந்து தெரிந்து செல்லும் ‘அ’மைப்பு ‘ர’கவாரியாக ‘சு’கமளிக்கும் ‘அரசு’ ஆக நிலைக்கும்.
சொல்லுகின்ற சொல் நம்செல்களின் வளர்ச்சியினை பொறுத்து, உள்ளத்தின் அடிப்படையில், தாயனை, ஆறனை தொடர்புகளில் கோர்த்து, தைத்து அமைத்த சொற்கள் வாயிதழிலில் எளிதாக வெளிவரும். சொன்னபடி செய்யும் அளவறிந்து வாழும் வாழ்க்கையே எந்நாளும் சிறப்புறும்.