காடும் கலையும் கண்டு மகிழ்வோம்

காடும் கலையும் கண்டு மகிழ்வோம்
எண்ணும் எழுத்தும் பேச்சும் செயலும் 
     கண்ணும் கருத்துமாய் கவனம் கொள் 
உண்ணும் உணவும் நீரும் சேரும் 
      பண்ணும் பாடலும் பாடும் நாடும்.

நாடும் நம்முள் உறையும் இடம் 
     காடும் கலையும் கண்டு மகிழ்வோம் 
ஆடும் ஆட்டமுடன் பாட்டினிலும் பாடு
      வாடும் பயிருக்கு நீரினை இடு.

இடும் பழக்கம் வழக்கம் ஆகும் 
      ஏடும் எழுத்துருவும் அளவு பதிவாகும் 
ஈடு செய்யும் நல்லறச் சுற்றமும் 
       நாடு நலமுற பலமுறை துறையாகும். 

துறை தோறும் நடைபெறும் தொழில் 
     உறை போட்டு காட்டும் படிமலர்ச்சி 
மறைபொருள் உருவாக்கம் ஆக்கம் பெருகும் 
      பறைசாற்றி பகிர்ந்து பரிமாற்றம் செய். 

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்