சொல் வேட்டை’ நூல் மறுபார்வை
சொல்லறம்
சொல்லறம் ஓர் ‘புதுவிசை’ என்போம்.
சொல்லறம் ஓர் ‘புதுவிசை’ என்போம்.
‘பு’ள்ளியின் ‘து’ணைநிலை
‘வி’ண்ணுலக ‘சை’கை என்போம்.
தகுதி ’ -தகு + தி = தகுதி
சொல்லறம் ‘தகுதி ’
இல்லறம் இனிக்க நம்தொடர்
சொல்லறம் சொல்லி விளங்க முடியும்
இல்வாழ்க்கை அமைய உள்ளம் தரும்
நல்லவை நாடிய நரம்பியல் வைக்கும்.
வைக்கும் இடம் பெற்ற சுற்றுலா
தைக்கும் வையகச் சுழற்சி முறை
ஊக்கம் பெற்ற புரதப் புதுவிசை
தாக்கத்தின் வாய்ப்பு பண்பினில் சிறக்கும்.
சிறந்த அவை அன்பினில் சுரக்கும்
பிறந்த இடம் பெற்ற மொழியில்
பறந்து சென்று பற்றிக் கூறும்
அறம் ஆக்கம் அறிவியல் ஆற்றலுறும்.
ஆற்றல் ஆறுதல் கூறிய மரபணு
கற்றலில் கண்ட தலைமுறை நிலைப்பாடு
பற்றிய யாவும் நாடிய ஒற்றுமை
தொற்றியத் தொடரிணைவு ஆறனைச் சேர்க்கை.
மொழி அறிஞர்கள் பதிவு செய்வது என்பது ஒவ்வொரு வாழ்நாளும் மனித இன நிலை தேவையானவற்றை பெருக்கி, விருப்பம் இல்லாதவற்றை நம் மூளையில் இருந்து அகற்றும் ஓர் தலைசிறந்த அறமாகும்.
‘சொல் வேட்டை’ என்ற நூலில் நீதியரசர் ‘அக்ரோனிம்’ என்ற ஆங்கில ஒலிப்பு முறை இலக்கு குறியீடுகளை
‘தொகுசொல்’ என்றழைக்கப்படுவதும்,
சொற்சுருக்கம் என்றழைக்கப்படுவதும் மிகவும் சிறப்பாக இருக்கும் எனப் பதிந்து உள்ளார்.
‘சொற்சுருக்கம்’, ‘தொகுசொல்’ என்பது மிகவும் பயனுள்ள பதிவாக நாம் பயன்படுத்தலாம் .
இது குறித்து மேலும் பல தமிழ், லத்தின் அகராதி வேர்ச்சொற்களை பலரும், பலரால் பலநாட்கள் பயன்படுத்தியதன் வரலாற்றினைக் காண்போம்.
‘தொகு’ என தத்தம் இதழில் மனித இன வரலாற்றில, ‘த’ரமான ‘கு’ணமான என மூளையில் பதியும் ‘தகு’ என்று பொருள்படும்.
‘தகு’ என்று அழைக்கப்படும் இரண்டு எழுத்துச் ‘சீர்’ மையமாக பல்வேறு இயற்கை வளத்தின் மூலப்பண்புகள் நாடி வழங்கும் மனித இனத்தின் இடம், மொழியியல் தரத்தை தரவாக காணலாம்.
‘இ’ என்ற இயற்கை ஒலிப்பு நெறிமுறை மக்களின் மனங்களில் நிற்பவை ஆகும்.
இது மக்களின் இயற்கை வளத்தின் ‘ல’ட்சியகோடான
‘இ’ என்ற எழுத்துரு உணர்வுகள்,
‘ல’ எனும்
‘இ’யற்கை வள ‘ல’ட்சிய பண்புகளை ‘இல’ என்ற ஒலிப்பு முறையாக வெளிப்படுத்துகிறது.
‘இ’ன்மையின் நற்பண்புகளில் இருந்த
‘ல’ட்சியம்
‘இல’ என்று முழுமை பெற்று
பொறுப்பாக ஓர் புள்ளி பெற்று, எழுத்து அதிகாரம் 372 புள்ளி மயங்கியலில் தொல்காப்பியத்தில் பயன்படுத்தி ‘இல்’ என எழுதுவதை எழுத்துரு அளவில் உள்ளார்.
ஒவ்வொரு சொற்களின் இயற்கை அறமாக
இடையொற்று ஈறுகள் ‘இன்மை’ என்ற ஒலிப்புக்கு ஒத்து,
வல்லெழுத்து மிகுந்த ‘ஐ’ என்ற காலந்தோறும் இணையும் ஆகாரம் கொண்ட பற்களின் இடையே வருதலினால் முறைமை பெற்று மனித இனத்தில் வளம் வருகிறது.
தொல்காப்பியம் ‘இடையொற்று ஈறுகள்’ என பின்வரும் பாடலில்
சிறப்பு தோற்றம் தருகிறது.
”
‘இல்’ என் கிளவி இன்மை செப்பின்,
வல்லெழுத்து மிகுதலும், ஐ இடை வருதலும்,
இயற்கை ஆதலும், ஆகாரம் வருதலும்
கொளத் தகு மரபின் ஆகு இடன் உடைத்தே.”
என்கிறார்.
‘த’ரம் ‘கு’ணம் என்ற ‘தகு’ ஒலிப்பு முறை திறனாய்வில் மனித இன திறவுகோல் குறியீடு
ஆக ஆளுமை பெற்று உலக அளவில் திறன் யாவும் நாடும் நாளும் வெளிவந்த ஒலிப்பு
முறை சொல்லறத்தில் மேலும் ‘தகுதி’ ஆக உள்ளது.